Begin typing your search above and press return to search.
ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலமாக தீர்வுத் தொகையாக ரூ.2.55 கோடி மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்ததார்.
தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலை வகித்தார்.சட்டப் பணிகள் குழுவின் தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார்.
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 432 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2,55,45,350 தீர்வுத் தொகையாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடக்க விழாவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் செந்தில்குமார்,சரவணக்குமார் உள்பட நீதிபதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் நட்டார்.