/* */

கோடை வெப்பம் அதிகரிப்பு - தவிர்க்க ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை!

கடந்த சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது.

HIGHLIGHTS

கோடை வெப்பம் அதிகரிப்பு -  தவிர்க்க ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை!
X

ஆட்சியர் கலைச்செல்வி ( கோப்பு படம் ) 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

*வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்*

  • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.
  • பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
  • முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  • நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.
  • வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  • வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
  • மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும்.

*குழந்தைகளுக்கான வழிமுறைகள்*

  • குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக் கூடாது – அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.
  • நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை விட்டு செல்ல வேண்டாம்.
  • இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள்.
  • குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும்.
  • குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

*முதியவர்களுக்கான வழிமுறைகள்*

  • தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
  • போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*கால்நடைகளுக்கான வழிமுறைகள்*

  • கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும்.
  • அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம்.
  • அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.
  • பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து, போதுமான நீர் கொடுக்க வேண்டும்.
  • செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்

என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 March 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!