காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் நிகழ்ச்சி
Olympic Torch Relay - காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
Olympic Torch Relay -மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா நாளை மறுநாள் துவங்குகிறது.இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒலிம்பியாட் ஜோதி ஓட்ட விழிப்புணர்வு இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஒலிம்பியாட் செஸ் ஜோதி ஓட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டம் காவலான்தெரு , மேட்டுத்தெரு , காமராஜர் தெரு வழியாக நாதஸ்வரம் , பேண்டு வாத்தியங்கள் முழங்க மாவட்ட விளையாட்டு அரங்கத்தினை அடைந்தது.
இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா , பள்ளி , கல்லூரி மாணவர்கள், ஆயுதப்படை காவலர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் என 250 கற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2