தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சாம்பியன் பட்டம்: கலெக்டர்பாராட்டு
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 17 மாநிலங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
சிலம்பம் எனும் கலை தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்த தற்காப்பு கலையை தற்போது அனைத்து வயதினரும் கற்று வருகின்றனர்.
குறிப்பாக கல்வி பயிலும் இளம்பருவத்தினர் தற்போது சிலம்பம் கலையை பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கல்வி கற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால் இதில் அதிக அளவில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
குறிப்பாக பெண்களின் 60% தங்கள் பாதுகாப்பு கருதி இந்த சிலம்பம் போட்டியை ஆர்வமுடன் கற்று வருவது மீண்டும் தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை கற்பது உலக அளவில் உணர்த்தும் வகையில் உள்ளது.
மேலும் இதனை ஊக்குவிக்கும் வகையில் வட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் வரை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தங்களது கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெற இது பெரிதும் உதவுகிறது.
அவ்வகையில் பேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 14ஆம் தேதி டெல்லியில் உள்ள எம் கே சி எஸ் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் துவங்கியது தமிழகம் , கேரளா, ஆந்திரம் , தெலுங்கானா , கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர் வீராங்கனைகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போ போட்டிகள் நான்கு வயதுவரம்பு குழுக்களாக பிரிக்கப்பட்டது. ஐந்து முதல் பத்து வரையும், 11 முதல் 15 வரையும் , 16 இல் இருந்து 20 வரையும் , 21லிருந்து 25 வரை சூப்பர் சீனியர் பிரிவு என்ற முறையில் குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஸ்வின் சிலம்பாட்ட குழுவின் சார்பாக 16 பெண்கள் 29 ஆண்கள் என மொத்தம் 45 பேர் பயிற்சியாளர் அஸ்வின் மற்றும் பாபு தலைமையில் இப் போட்டியில் பங்கேற்றனர்.
தொடு முறை தனித்திறமை என பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் இக்குழு 33 தங்கம் 4 வெள்ளி 11 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்றது.
இதன் மூலம் இப் போட்டியில் சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க இக்குழுவில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் திரும்பிய இக்குழுவினருக்கு புதிய ரயில்வே நிலையத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக நடனமாடி பெற்றோர்கள் உறவினர்கள் என பலர் வரவேற்றனர்..
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியை சந்தித்து காஞ்சிபுரம் குழு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரைய்யா ,. மாநகராட்சி மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், பயிற்சியாளர்கள் எஸ்.பாபு , பி.அஸ்வின், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.