/* */

காஞ்சிபுரம் : பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்

காஞ்சிபுரம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்பி பாராட்டினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்
X

கைது செய்யப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளி,

காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி ஏரிக்கரையில் கடந்த3ம் தேதி மலர் என்பவர் கீழம்பி ஏரியில் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர், மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததால் மலர் மயங்கியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை (3 சவரன் தாலி மற்றும் 2 சவரன் செயின்) பறித்துச் சென்றார்.

இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவிட்டதின் காரணமாக 05.08.21 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்கினை சிறப்பாக விசாரணை செய்த தனிப்பிரிவு காவலர் சோமசுந்தரம் அவர்கள் மேற்படி குற்றச்சம்பவத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த சீராளன் என்பவர் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் உதவியுடன் மேற்படி எதிரியை கைதுசெய்து அவரிடமிருந்து வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாகவும் புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி எதிரியை கைது செய்ய குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M. சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.

Updated On: 7 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!