Begin typing your search above and press return to search.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், நசரத்பேட்டை , அண்ணா தெருவை சேர்ந்த அப்பு ( எ ) விக்னேஷ். இவர் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விக்னேஷை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் ராஜகோபால் , விக்னேஷ் (எ) அப்பு என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.