Begin typing your search above and press return to search.
விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள் விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்
வரும் பருவத்தில் விவசாயிகள் எந்த விதைகள் ஆனாலும் அதன் தரத்தை அறிந்து விதைப்பு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆடிப்பட்டம் தேடி விதை என்றபழமொழிக்கு ஏற்ப பயிரிடத் தயாராகியுள்ள விவசாயிகள் தங்கள் விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நல்ல தரமான முளைப்புத் திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலைத் தரும்.
எனவே விவசாயிகள் தங்களது விதை நெல்லை விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம்,காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனைக் கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.