/* */

பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கபட்ட பட்டுப் புடவை

மாதுளம் பூ , கடுக்காய் சப்ரான் படிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு மீண்டும் இயற்கை சாயம் பட்டுப் புடவைகளுக்காக உருவாக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கபட்ட பட்டுப் புடவை
X

இயற்கை சாயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளுக்கான வண்ணங்களை ஆர்வத்துடன் பார்வையிடும் தனியார் நிறுவன ஊழியர்கள்

சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டியல் முந்தைய கால இயற்கை ரசாயனத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமான காஞ்சி பட்டு சேலைக்கு அடிமை ஆகாத பெண்களே இல்லை என கூறலாம். காலங்கள் மாறினாலும் பாரம்பரியத்துடன் தற்போது நவீன டிசைன் மற்றும் வண்ணங்களில் தற்போதைய இளம் பெண்கள் பட்டு சேலையில் உருவாக்க்கி அதனை அணிந்து கொள்ள அதிக ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய பட்டு சேலையில் வண்ணம் சேர்க்கும் பணியினால் சுற்றுச்சூழல் மாசடைந்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் மற்றும் ரசாயனங்களால் உடல் தீங்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் முந்தைய காலங்களில் நடைமுறைப் படுத்திய பல்வேறு பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் சாயம் இடுதல் மீண்டும் தனியார் பட்டு சேலை உற்பத்தி நிறுவனத்தால் முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மன நிறைவை அளித்தாலும் பொருளாதார ரீதியாக இது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் இதனை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இயற்கை சாயம் தயாரிக்கும் ஊழியர் ஜெயராமன் கூறுகையில், உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலையில் கடந்த இருநூறு வருடங்களுக்கு முன்பு இயற்கை முறையில் சாயம் ஏற்றி பட்டு உருவாக்கப்பட்டு அதனை சேலையாக நெய்து வந்தனர்.

தற்போது அந்த முறையை பின்பற்றும் வகையில் மாதுளம் பட்டை , மாதுளம் பூ, சப்ரான் வுட் , கடுக்காய் தூள், படிகாரம் வெங்காய தோல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு தற்போது 16 வண்ணங்கள் இதில் உருவாக்கப் பட்டுள்ளது.

ஒரு கிலோ சாயத்தில் நான்கு புடவைகளுக்கான வண்ணங்கள் மேலும் பல புதிய முயற்சியில் பல வண்ணங்கள் இளம் பெண்கள் விரும்பும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் மீண்டும் முந்தைய பாரம்பரிய இயற்கை சாயா முறைக்கு திரும்புவதால் இயற்கை சூழலும் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 22 April 2024 1:15 PM GMT

Related News