ஜெயலலிதா பிறந்தநாள்- 5073 பேருக்கு பட்டுப்புடவை வழங்கல்
காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 5073 பேருக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 5073 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கொடியேற்றி 73 கிலோ எடையுள்ள கேக் வெட்டி, 5073 பேருக்கு பட்டு புடவைகள் வழங்கினார்.
இதையடுத்து அதே பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 73 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். விழாவில், அதிமுக மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சத்யா, காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், அரசு வழக்கறிஞர் சம்பத் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.