காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 முகாம்களில் 995 பேருக்கு தடுப்பூசி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் சார்பில் ஒரே நாளில் 40 சிறப்பு முகாம்களில் 995 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக துணை இயக்குனர் சுகாதார துறை மருத்துவர் பழனி தகவல் தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில்நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.நேற்று ஓரே நாளில் 835 பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் மருத்துவர் பழனி பெருநகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி ஒன்றியம் ஆகியவைகளுடன் இணைந்து 40 இடங்களில் இன்று மருத்துவ தடுப்பூசி முகாம்களை நடத்தினர்.
இம்முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் , கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுத்தல், மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இன்று மட்டும் 995 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள் இதை தவிர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள சுற்றுப்பகுதி பொதுமக்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் காஞ்சி மாவட்ட சுகாதாரத்துறை விரைவாக செயல்பட்டு பரவலை தடுக்கும் நோக்கில் செயல்படும் என தெரிவித்தார்.