/* */

மது கடைகயில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீஸ் தேடுது

மது கடையில் ரகளையில் ஈடுபட்டு, அடுத்தவரை அடித்து உதைத்து தகராறு செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

மது கடைகயில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீஸ் தேடுது
X

தகராறு நடந்த மதுபான கடை

மதுக்கடையில் ரவுடிசத்தில் ஈடுபட்டு மது பாட்டிலால் இருவரை அடித்து காதை கிழித்து தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள மதுக்கடையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(40), என்பவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது மதுக்கடைக்கு வந்த வேளச்சேரியை சேர்ந்த லெனின்(30), என்ற நபர் தனது செல்போனில் பாலாஜியை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென லெனின் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து பாலாஜியின் காதில் அடித்து காதை கிழித்து விட்டார்.

மதுக்கடைக்கு மது பானம் சப்ளை செய்ய வந்த லாரி ஓட்டுநரான எழில்குமார்(32), என்பவரையும் மது பாட்டிலால் தோள்பட்டையில் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவருக்கும் ரத்தம் அதிகளவில் வெளியானது. உடனே அங்கிருந்து லெனின் தப்பி ஒடிவிட்டார்.

காயமடைந்த இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 மற்றும் 9 தையல் போடப்பட்டு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மதுக்கடையில் மதுபாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய லெனினை ஆதம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!