மது கடைகயில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீஸ் தேடுது
மது கடையில் ரகளையில் ஈடுபட்டு, அடுத்தவரை அடித்து உதைத்து தகராறு செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
HIGHLIGHTS
மதுக்கடையில் ரவுடிசத்தில் ஈடுபட்டு மது பாட்டிலால் இருவரை அடித்து காதை கிழித்து தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள மதுக்கடையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(40), என்பவர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது மதுக்கடைக்கு வந்த வேளச்சேரியை சேர்ந்த லெனின்(30), என்ற நபர் தனது செல்போனில் பாலாஜியை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென லெனின் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து பாலாஜியின் காதில் அடித்து காதை கிழித்து விட்டார்.
மதுக்கடைக்கு மது பானம் சப்ளை செய்ய வந்த லாரி ஓட்டுநரான எழில்குமார்(32), என்பவரையும் மது பாட்டிலால் தோள்பட்டையில் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவருக்கும் ரத்தம் அதிகளவில் வெளியானது. உடனே அங்கிருந்து லெனின் தப்பி ஒடிவிட்டார்.
காயமடைந்த இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 மற்றும் 9 தையல் போடப்பட்டு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மதுக்கடையில் மதுபாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய லெனினை ஆதம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.