/* */

கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்ற 72 மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற, 154 மாணவர்கள், 282 மாணவிகள் என மொத்தம் 436 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். நேற்று முன்தினம் மாலை, தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 24 மாணவர்கள், 48 மாணவிகள் என, 72 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

அரசு பள்ளி அளவில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணவேணி 292 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாணவி சுகந்தி 251 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளனர். நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுஜி, 277 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களையும், மாணவிகளே பிடித்து சாதனை படைத்துள்ளனர். கடந்த 2019-2020ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 25 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

Updated On: 3 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!