சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடனான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பட்டாசு விற்பனையாளர்களுடனான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருடன் வருவாய்த் துறை சார்பில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தனர்.
பழனிவேல் வரவேற்றார். கூட்டத்தில், பட்டாசு கடை விற்பனையாளர்களுக்கு தீயணைப்பான் கருவிகளை இயக்கும் முறை மற்றும் தீ தடுக்கும் முறைகளையும் புரியும் படி செயல்முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.மேலும், அரசு விதிமுறைப்படி, மணல் நிரப்பிய பக்கெட், தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கடையின் அருகே புகை பிடிக்க அனுமதிக்கக்கூடாது. எளிதில் தீ பிடிக்கும் கருவிகளை வைக்கக் கூடாது என அறிவுறுத்தினர். கூட்டத்தில், சின்னசேலம், நைனார்பாளையம், கச்சிராயபாளையம் பட்டாசு கடை விற்பனையாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்றனர்.