Begin typing your search above and press return to search.
சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் கோமுகி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி, அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சின்னசேலம் தாலுகாவில் உள்ள 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடத்துார் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவுள்ள தெங்கியாநத்தம் ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த ஏரிகளை, கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது, ஏரி கரைகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன், பொதுப்பணி துறை அலுவலர் பிரபு, பி.டி.ஓ., துரைசாமி, தாசில்தார் அனந்தசயனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.