/* */

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இரண்டு கோடியே 38 லட்சம்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக இரண்டு கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 ரூபாய் கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இரண்டு கோடியே 38 லட்சம்
X

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரொக்கமாக 2 கோடியே 38லட்சத்து 86ஆயிரத்து 50ரூபாயும், தங்கம் 1373கிராம், வெள்ளி 15319கிராம், வெளிநாட்டு கரன்சி 91நோட்டுக்களும் கிடைத்துள்ளது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் மதுரை மண்டல உதவி ஆணையர் விஜயன், பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்