Begin typing your search above and press return to search.
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம்
வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாநகராட்சி 34, 44, 45 வது வார்டு சவேரியார் பாளையத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பதற்கு இலவச பட்டா நிலம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பல முறை மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டகுழு உறுப்பினர் கணேசன் உறுப்பினர் ஜோதிபாசு நகர செயலாளர் ஆசாத் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.