/* */

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி

திண்டுக்கல்லில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்; சம்பவ இடத்தில் எஸ் பி விசாரணை

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சி
X

மர்மநபர்களால் தாக்கப்பட்டு கிடக்கும் கடை உரிமையாளர்

திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு( வயது 35) இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் . கடையில் இருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாலிபரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்,

கொலை முயற்சி சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு