பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு அபராதம்
தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு 30 ஆயிரம் வரை அபதாரம் விதித்தனர்.
தடை செய்த பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது என அரசு அறிவித்து உள்ளது.இதையடுத்து திண்டுக்கல் பகுதியில் கேரி பைகள், மெழுகு கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதுடன் ஹோட்டல்களில் பார்சலுக்கு சாம்பார், ரசம் போன்ற சூடான பொருட்களை பிளாஸ்டிக் பையில் கட்டித்தர படுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராம பாண்டியன் தலைமையில் உணவு துறை அதிகாரிகள் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்,
அப்போது, உணவு கூடங்களில் சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்கள் பார்சல் தருவதற்கு வைத்திருந்த, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் உடைந்துபோன முட்டைகளில் ஆம்லெட் போன்றவற்றை தயாரித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து முட்டைகளையும் அப்புறப்படுத்தினர். அதேபோல் டீக்கடைகள், மிச்சர் கடைகளில் ஆய்வு செய்ததில் அங்கு வைத்திருந்த ஏராளமான கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதையடுத்து தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்,