Begin typing your search above and press return to search.
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட கலைவேந்தன் கடந்த 2016ஆம் ஆண்டு கல்லால் அடித்த கொலை செய்யப்பட்டார்
HIGHLIGHTS
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகேயுள்ள எரியோடு ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் கலைவேந்தன். இவரது மனைவி அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட கலைவேந்தனை கடந்த 2016ஆம் ஆண்டு துரைப்பாண்டியன் கல்லால் அடித்த கொலை செய்துள்ளார்.
இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றவாளி துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜமுனா தீர்ப்பு வழங்கினார்.