/* */

திண்டுக்கல் பைனான்ஸ் அதிபர் மர்மமான முறையில் மரணம்

திண்டுக்கல்லில் பைனான்ஸ் அதிபர் மர்மமான முறையில் மரணம். அழுகிய நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

திண்டுக்கல் பைனான்ஸ் அதிபர் மர்மமான முறையில் மரணம்
X

திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பைனான்ஸ் அதிபர்

திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சிக்க முத்து. இவரது மகன் பிரபாகரன் (43). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரபாகரனின் மனைவி சுமதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆர்.எம் காலனி பகுதியில் உள்ள வீட்டில் பிரபாகரன் மட்டும் தனியே இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பிரபாகரன் வீட்டை விட்டு வெளிவரவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவு தாழ்ப்பாள் எதுவும் போடாமல் திறந்திருந்ததையடுத்து உள்ளே சென்று பார்த்தனர் படுக்கையறையில் உடல் அழுகிய நிலையில் பிரபாகரன் பிணமாக கிடந்துள்ளார்.

உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு போலீசார், கதவு மூடப்படாமல் இருந்த காரணத்தினால் பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து வீட்டில் படுக்கை அறையில் போட்டு சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்