Begin typing your search above and press return to search.
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு ரயிலில் வந்தது 2,630 டன் ரேஷன் அரிசி
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வந்தது.
HIGHLIGHTS
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க தேவையான அளவு அரிசி இருப்பு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் சரக்கு ரயிலில் ரேஷன் அரிசி வந்தது. இந்த ரயிலில் மொத்தம் 2,630 டன் ரேஷன் புழுங்கல் அரிசி வந்தது.
இதையடுத்து அவை திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, முருக பவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.