Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்லில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது : வாகனம் பறிமுதல்
திண்டுக்கல்லில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2880 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் கடத்தல் மது பாட்டில்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர். போதனையில் 2,880 வெளிமாநில மதுப்பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கடத்தல் மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் மதுபாட்டில்கள் கடததிய ௩ பேரையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.