/* */

திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருட்டு

திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருட்டு
X

திருடு நடந்த வீடு. 

திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஃபிக் (வயது 46). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் பாலகிருஷ்ணாபுரம் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஒரு கலர் டிவியை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பூட்டை உடைத்து, டிவி மட்டும் ரொக்கப் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. ரபிக், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!