Begin typing your search above and press return to search.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ஜெயராமன் இவரும் இவரது மகன் ஜெகன் என்பவரும் இன்று ஒரு காரில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காரில் புகை வருவதாக சாலையில் சென்றவர்கள் கூறியதை அடுத்து சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினர். சற்று நேரத்தில் திடீரென பற்றி எரிய தொடங்கி தீ, மளமளவென கார் முழுவதும் பிடித்து எரிய தொடங்கியது.
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.