/* */

திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திண்டுக்கல்லில், பொறியாளர் மதன்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை
X

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர். 

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கோட்ட பொறியாளர் மதன்குமார், ஒப்பந்தக்காரர்கள் செய்த பணிகளுக்கு, நிதி வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு இணைந்து, நேற்றிரவு திடீரென சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மதன்குமார் அறையில் இருந்து, கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து, விசாரணை நடக்கிறது. இச்சம்பவம், திண்டுக்கல்லில் பரபரபப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 8 Jan 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!