Begin typing your search above and press return to search.
சின்னக்காம்பட்டி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
சின்னக்காம்பட்டி புதுரில் கோவையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
HIGHLIGHTS
அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான உறவினர்கள் மற்றும் கோவையில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளின் வீட்டில் இன்று 53 இடங்களில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூர் பகுதியிலுள்ள கோவையில் வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இன்று அதிகாலை 6 மணிமுதல் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை முக்கிய ஆவணங்கள் சிக்கியதற்கான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.