/* */

திண்டுக்கல்லில் தெற்கு மாவட்ட பாமக அலுவலகம் திறப்பு விழா

திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் தெற்கு மாவட்ட பாமக அலுவலகம் திறப்பு விழா
X

திண்டுக்கல்லில், தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திலகபாமா,  கட்சி அலுவலகத்தை  திறந்து வைத்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று, திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா ஆத்தூர் தொகுதி செம்பட்டியில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட தலைவர்கள் மணி, வைரமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி சந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்