/* */

சாமி சிலையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாமி சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

சாமி சிலையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
X

சாமி சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் 

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. திறந்த நிலையில் உள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக பொது மக்கள் நிதி திரட்டியதை அடுத்து கட்டுமான பணிகளும் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அங்கு வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பிடாரி அம்மன் கோவில் கட்டப்படும் இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிஷ்ட குருநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் பிடாரி அம்மன் சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தின் முன்பு அம்மன் சிலையை வைத்து விட்டு திடீரென முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த பண்ருட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர்கள் இது குறித்து அங்கு மனுக்கள் பெறும் முகாமுக்கு வந்திருந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு பிரச்சினைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுமான பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சாமி சிலையுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 15 Jun 2023 3:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்