Begin typing your search above and press return to search.
கடலூரில் ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
கடலூரில் ஒரு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முனிஸ் என்ற முனுசாமி என்பவரிடம் 1.1/4 கிலோ கஞ்சா இருந்தது போலீசார் கண்டறிந்தனர். அதேபோல அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் கே.என் பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர், நவநீதம் நகர் தினகரன், தங்கராஜ் நகர் ராஜேஷ், ஆகியோரையும் கைது செய்தனர்.சோதனையில் காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.