Begin typing your search above and press return to search.
கடலூரில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுகவினர் அஞ்சலி
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
HIGHLIGHTS
அதிமுக மூத்த நிர்வாகியும், அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மதுசூதனன் மறைவுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் சி சம்பத் கடலூர் மாவட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுக கடலூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.