/* */

அரைகுறை ஆங்கிலத்தில் போலீஸிடம் அலப்பறை விட்ட போதை ஆசாமி கைது

அரைகுறை ஆங்கிலத்தில் போலீசாரிடம் அலப்பறை விட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அரைகுறை ஆங்கிலத்தில் போலீஸிடம் அலப்பறை விட்ட போதை ஆசாமி கைது
X
பைல் படம்

கடலூர் அருகே புதுவை மாநில எல்லையில் ஏராளமான மதுபான கடைகள் உள்ள நிலையில் அங்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்களை போலீசார் ஆங்காங்கே பிடித்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் பிடித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் உங்கள் பெயர் என்ன எந்த ஊர் என்று கேட்டதுதான் தாமதம்; நான் திருச்சி, திருநெல்வேலி அல்ல நான் கடலூர் ஓடி பகுதியை சேர்ந்தவன் நான் கடலூர் ஓடி மற்றும் தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்தவன். அதனால் என்னை நீங்கள் நிறுத்தக்கூடாது என்னை ஏன் நிறுத்தினீர்கள் என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கடகடவென உலரித் தள்ளினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்ட போது மீண்டும் நிறுத்தாமல் அவர் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறினார். இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் சிரித்த நிலையில் ஏன் சிரிக்கிறீர்கள் நான் ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசுகிறேன் என கூறினார்.

பின்னர் பொறுமை இழந்த போலீசார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது பாணியில் சிறப்பாக கவனித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 12 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்