காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை
கடலூரில் காதலனுடன் தனிமையில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் கைது- போலீசார் விசாரனை
HIGHLIGHTS
கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த 21 வயது இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது- போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில்,விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து,குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று இருக்காது என்றும், விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதே சமயம்,வேலூரில் நள்ளிரவு படம் பார்த்து நண்பருடன் ஆட்டோவில் எரிய பெண் மருத்துவரை கடத்தி சென்று நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இந்நிலையில்,கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி,கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது),சபரி என்கிற கிஷோர் (19 வயது) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,பெண்ணின் ஆண் நண்பரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.