/* */

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது

கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
X

கடலூரில் தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்குவை தாக்கிவிட்டு அதே அரிவாளால் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். பேருந்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த மருதுவுடன் இணைந்து தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் அவரது நண்பர்களான ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சி.சி.டி.வி. பதிவில் தோன்றும் ரவுடிகள் பேருந்து ஓட்டுனரை வெட்டிவிட்டு பேருந்து கண்ணாடிகளை உடைக்கும் பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Updated On: 2 Dec 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  7. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  9. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  10. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!