/* */

கோவை மாவட்டத்தில் காலாவதி உணவு விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

கோவையில், காலாவதி உணவுப் பொருள் விற்பனை தொடர்பான சோதனை நடத்திய அதிகாரிகள், இது தொடர்பாக கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் காலாவதி உணவு விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
X

கோவையில், கடைகள் சிலவற்றில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 குழுவினர், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவ்வகையில், கோவை அவினாசி சாலை, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், மசக்காளிபாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில், கடைகள், வணிக வளாகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006, உட்பிரிவு 55, 63-ன் கீழ், அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய, 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் விதித்தனர்.

Updated On: 23 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...