/* */

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 2 ஆவது நாளாக விசாரணை…

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 2 ஆவது நாளாக விசாரணை…
X

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்.

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை உக்கடம் பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில் முன்பாக நின்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் காரில் இருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது.


தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் 6 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும், உயிரிழந்த ஜமோஷா முபின் எங்கு பயிற்சி பெற்றார்? அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரை எல்லாம் சந்தித்தார்? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் 5 பேரையும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து ஐந்து பேரிடம் பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று 5 பேரையும் கோவை அழைத்து வந்து 5 பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும், உக்கடம் புல்லுக்காடு, கோட்டைமேடு, லாரி பேட்டை, அல் அமீன் காலனி, பிளால் எஸ்டேட், ஜி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள், யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திதனர்.

5 பேருக்கும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை விசாரணை நடத்த கால அவகாசம் உள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக உக்கடம் அன்பு நகர் பகுதிக்கு 5 பேரையும் அழைத்து சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள பெரோஸ் கான், உமர் பாரூக், முகம்மது அசாரூதன், அப்சர் கான், பெரோஸ் ஆகியோர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள், அவர்கள் மேற்கொண்டு வந்த பணிகள் என்ன? வெளியூர் எங்கெல்லாம் சென்று வந்தார்கள்? வெளியூர் செல்லும்போது யாருடன் சென்றார்கள்? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 Dec 2022 7:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!