/* */

மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
X

மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கம்

சென்னை : மெட்ரோ ரயில் சேவைகள் முதல் கட்டமாக நாளை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். தேவைக்கு ஏற்ப நேரம் மாற்றம் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் விமானநிலையம்-விம்கோநகர் வரையிலும், பச்சை வழித்தடத்தில் பரங்கி மலை மெட்ரோ-டாக்டர் எம்ஜி ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

இரண்டு வழித்தடத்திலும் நாளை முதல் நெரிசல் நேரங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் இல்லாத வழக்கமான நேரங்களில் 10 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும்.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் வருகை, வெளியேறும் பாதைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் , காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளியை குறிக்கும் குறியீடுகளை பயணிகள் பின்பற்ற வேண்டும்.

மெட்ரோ ரயிலில் பயணிப்போர், ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On: 20 Jun 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!