/* */

திருவொற்றியூரில் இளைஞர் கொலை: 3 பேர் கைது

திருவொற்றியூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

திருவொற்றியூரில் இளைஞர் கொலை: 3 பேர் கைது
X

பைல் படம்

சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சோபன் (27) என்ற இளைஞர் சனிக்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். மேலும் இக்கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

பழைய வண்ணாரப் பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் சோபன். புறா வளர்ப்பதிலும், பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த பிரசாத் என்பவருக்கும் ஷோபனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறி பிரசாத்தை பீர் பாட்டிலால் சோபன் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாத் தான் தாக்கப்பட்டது குறித்து தனது நண்பர்களான ஜோதிபாசு ( 26), சுரேஷ் (23), நிர்மல் குமார் (22) ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கிருந்து சோபன் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் அவரை தேடி வந்த பிரசாத்தின் நண்பர்கள் மூவரும் திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதி அருகே மேற்கு மாட வீதியில் சோபன் நிற்பது நின்று கொண்டிருப்பது தெரிய வந்ததையடுத்து உடனடியாக அங்கு சென்று சோபனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சோபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தனர்.மேலும் இப்பகுதியில் தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் காதர் மீரான் விசாரணை செய்து வருகிறார் . கைது செய்யப்பட்ட மூவரையும் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். போலீஸ் விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோதிபாசு மீது ஏற்கனவே கொலை,கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மது போதையில் நடைபெற்ற கொலை சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 Dec 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!