/* */

இரவு ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் - மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை

இரவு ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் - மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை
X

இரவு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலமாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து இரவு முழு ஊரடங்கு தொடங்கி உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்,மேலும் 200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு சென்னை காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் "போலீஸ் வாக்கி டாக்கி" மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். "இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள், அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதனை கண்காணியுங்கள். மருத்துவ தேவை, மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்ல அனுமதியுங்கள். தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள்" என்று போலீஸ் வாக்கி டாக்கி மூலமாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார்.

Updated On: 21 April 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!