/* */

ரூ.5 லட்சம் மதிப்பு ஜெர்மனி போதை மாத்திரைகள்; சுங்கத்துறை பறிமுதல்

ஜொ்மனியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பு போதை மாத்திரைகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ரூ.5 லட்சம் மதிப்பு ஜெர்மனி போதை மாத்திரைகள்; சுங்கத்துறை பறிமுதல்
X

ஜெர்மனியிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள்.

ஜொ்மனியிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு வெளிநாட்டு சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு வந்தது. அதில் வந்த பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் பரிசோதனை செய்தனா். அப்போது ஜொ்மனியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த பாா்சல் ஒன்றில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த சுங்கத்துறையிர், அந்த பாா்சலில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா். ஆனால், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. பின்னர், சென்னை முவரிக்கு சென்று விசாரித்தபோது வீடு பூட்டியிருந்தது. அங்கு இளைஞா்கள் சிலா் தங்கியிருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில், சுங்கத்துறையினா், இன்று காலை அந்த பாா்சலை பிரித்து ஆய்வு செய்தனா். அந்த பாா்சலுக்குள் 100 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். அவைகள் மிகவும் விலை உயா்ந்தவை. செல்வந்தா்கள் முக்கியமான பாா்ட்டிகளில் பயன்படுத்துபவைகள். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரைகளை பரிசு பொருள் என்ற பெயரில் ஜொ்மனியிலிருந்து வரவழைத்த இளைஞா்களை தேடி வருகின்றனா்.

Updated On: 23 July 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!