/* */

வாலிபரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாலிபரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி கரண் என்ற கரடி கரண்.

வியாசர்பாடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 44 இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி முல்லைநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் குற்றவாளியை தேடிவந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் பணம் பறிப்பில் ஈடுபட்டது ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் கரண் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முல்லை நகர் சுடுகாடு அருகே எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த கரண் என்ற கரடி கரண் 29 என்பவரை கைது செய்தனர்.

கடந்தமாதம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரண் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 6 March 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்