/* */

சென்னையில் முகக்கவசம் அணியாத 842 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னையில் முகக்கவசம் அணியாத 842 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 30 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் முகக்கவசம் அணியாத 842 பேர்  மீது வழக்குப் பதிவு
X

சென்னை மாநகர போலீசார் தீவிர வாகன சோதனை ( பைல் படம்)

சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 287 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகு ரக வாகனம் என மொத்தம் 299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 842 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 14 July 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...