/* */

'அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது' அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தற்காலிகமாக தொடங்கப்பட்ட ‘அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது’ என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

HIGHLIGHTS

அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது அமைச்சர் மா. சுப்பிரமணியன்
X

அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையில் 2-வது அலையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் பெரியார் திடலில் அமைக்கப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள சூழலில் 45 படுக்கைகளுடன் முதல் இடமாக பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், ஒமைக்ரான் பாதித்து 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அறிகுறிகள் இல்லாமலிருந்தால் மருத்துவரின் அறிவுறுத்தல் பேரில் வீடுகளிலே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மண்டலம் வாரியாக கண்காணிக்க மருத்துவகுழு செயல்படும் என்றும் வீடுகளில் கண்காணிப்பு பணியை செய்ய 2 நாளில் மருத்துவ குழு செயல்பட இருக்கிறது என தெரிவித்தார்.

அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் தரவுகள் உள்ளது. அம்மா மினி கிளினிக் மூலம் பயனடைந்தவர்கள் பட்டியலை தர முடியுமா என்றும் அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது என விளக்கமளித்தார்.

15 வயதுக்கு மேற்பட்டோருக்கு நேற்றைய தினம் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 27 லட்சம் தடுப்பூசி 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கையில் இருக்கிறது என தெரிவித்தார்.

Updated On: 4 Jan 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...