/* */

பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
X

சென்னை மாநகராட்சி பைல் படம்

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பலர் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு 100 ரூபாய், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1,000 ரூபாய், பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் வரை கொட்டுபவர்களுக்கு 2000 ரூபாய்,

ஒரு டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய். திடக்கழிவுகளை எரிக்கும் தனியார் இடங்களுக்கு 500 ரூபாய் பொது இடங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On: 16 Oct 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!