/* */

சென்னை: விமானத்தில் ஏறச் சென்றபோது ஆரணி முதியவா் மயங்கி விழுந்து பலி

ஆரணியை சோ்ந்த முதியவா், சென்னையில் விமானத்தில் ஏற சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சென்னை: விமானத்தில் ஏறச் சென்றபோது ஆரணி முதியவா் மயங்கி விழுந்து பலி
X

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 105 பயணிகள் பயணிக்கவிருந்தனா்.அந்த பயணிகள் அனைவரும் போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த விமானத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அருள்தாஸ் (74) என்ற பயணியும் பயணிக்க வந்திருந்தாா். அவா் விமானத்தில் ஏறுவதற்காக நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தாா். அதிா்ச்சியடைந்த சக பயணிகள்,விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

விமானநிலைய மருத்துவ குழுவினா் விரைந்து வந்து பயணியை பரிசோதித்தனா். ஆனால் அவா் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டா்கள் அறிவித்தனா். அதோடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனா். சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்துவந்து, அருள்தாஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸ் விசாரணையில்,அருள்தாஸ் மகன்,அஸ்ஸாம் மாநிலத்தில் வேலையில் இருக்கிறாா். எனவே இவா் அடிக்கடி விமானத்தில் அஸ்ஸாம் சென்று மகனை பாா்த்து வருவாா். அதைப்போல் இன்றும் மகனை பாா்க்க அஸ்ஸாம் செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்தது தெரிய வந்தது.

Updated On: 16 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!