Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கட்சி நிர்வாகி கொலை- சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
கேரளா மாநிலத்தில், கேரளா மாநில எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் ஷான் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி தமிழக பொதுச்செயலாளார் உமர் பாரூக், சமூக தொண்டாற்றி வந்த நிர்வாகி ஷானை கொடுரமான முறையில் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். பாசிச பயங்கரவாதிகள் தங்கள் நிர்வாகியை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரளா அரசும், மத்திய அரசும் , இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பாசிச சக்திகளை கட்டுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறிய அவர், மரணத்திற்க்கு நீதிகிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தார்.