/* */

வைரமுத்து திருமண மண்டபத்திற்கு சீல்?

கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது .

HIGHLIGHTS

வைரமுத்து திருமண மண்டபத்திற்கு சீல்?
X

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கவிஞர் வைரமுத்து தனது மனைவியின் பெயரில் பொன்மணி மாளிகை என்ற திருமண மண்டபத்தினை கட்டியிருக்கிறார். கடந்த 1995ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம், கடந்த 27 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி ரூபாய் எட்டு லட்சம் நிலுவையில் இருந்ததால், வைரமுத்துவிற்கு சென்னை மாநகராட்சி அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பி வந்துள்ளனர். நான்கு வருடங்களாக நோட்டீஸ் கொடுத்து வந்தும் மாநகராட்சி சொத்து வரியை செலுத்தாமல் வைரமுத்து காலம் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார். இதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

வைரமுத்துவின் பொன்மணி மாளிகை திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை அடுத்து அவசர அவசரமாக நிலுவையில் இருந்த சொத்து வரி வைரமுத்து தரப்பில் உடனே செலுத்தினர். இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டனர்

Updated On: 22 April 2022 3:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...