/* */

முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

ஒருவார முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதலமைச்சர் ஆலோசனை!
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் இரு வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. எனவே நாளை முதல் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருவாரத்துக்கு அனைத்து கடைகள், நிறுவனங்கள் இயங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் நிலையம், மருத்துவமனைகள், மருந்தகம், நாட்டு மருந்துகடைகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் தொகுப்பு தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒருவார முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.

Updated On: 23 May 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்