Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் கூறினார்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நியமனங்களில் எந்த முறைகேடும் நடைபெறாது என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும்பலன் கிடைத்துள்ளது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.