/* */

சென்னையில் முககவசம் அணியாமல் வந்த 1089 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை பெருநகரில் முககவசம் அணியாமல் வெளியே வந்த 1089 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.2,17,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் முககவசம் அணியாமல் வந்த 1089 பேர் மீது வழக்குப்பதிவு
X

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கடந்த 23.10.2021 மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர். அங்குள்ள பல கடைகளின் உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசங்களை வழங்கினர்.

இன்று மாலை வரை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாமல் வந்த 1,089 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.2,17,800/- அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 54,977 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 1,09,95,400/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தீபாவாளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூடும் ஜவுளிக்கடைகள், மால்கள், மார்க்கெட் மற்றும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்.

எனவே வெளியே வரும் போது, கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 2 Nov 2021 5:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’