/* */

கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

கேளம்பாக்கத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு மராத்தான்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கேளம்பாக்கம் காமராஜர் சாலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியானது கேளம்பாக்கம் காமராஜர் சிலையில் துவங்கி திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் முடிவு பெற்றது. இந்த போட்டியினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களுக்கு சன்மானமும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் விடுதலை செழியன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2021 8:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!